தேனியில் கண்ணதாசன் என்பவரின் தோட்டத்தில் ஆச்சரியம்: 6 அடி நீள முருங்கைக்காய்!
பொதுவாக வீடுகளின் பக்கத்தில் வளர்க்கப்படும் முருங்கை மரங்களில் 1 முதல் 2 அடி நீளத்திற்கு மட்டுமே முருங்கைக்காய்கள் காய்க்கும். ஆனால், தேனியில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் தோட்டத்தில், ஆச்சரியமாக 6 அடி நீளத்திற்கு முருங்கைக்காய்கள் காய்த்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் இது பரவலாகி வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே விவசாயி சக்கரபாணியின் தோட்டத்தில் 5 அடி நீள முருங்கைக்காய் காய்த்தது மக்களின் கவனத்தை ஈர்த்தது. அவர் இஸ்ரேல் சொட்டுநீர் பாசன முறையைப் பயன்படுத்தி கத்திரிக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுடன் ஒட்டு வகை முருங்கையையும் சாகுபடி செய்து சிறந்த பலனைப் பெற்றார்.
ஆனால், இப்போது தேனியில் கண்ணதாசன் என்ற ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனது வீட்டு தோட்டத்தில் வளர்த்த முருங்கை மரம், சக்கரபாணியின் ச...









