பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்.
பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள யூத வழிபாட்டு தலமான ஹீட்டன் பார்க் ஜெப ஆலயத்தில் ஏற்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீசார் கூறியதாவது: கத்தியால் குத்தப்பட்ட பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்; குற்றவாளியை பின்னர் அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்பாக இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை, மான்செஸ்டரில் வழிபாட்டின் போது நடந்த இந்த கொடூரமான தாக்குதலைக் கண்டிக்கின்றோம் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, இந்த துயர தருணத்தில் இந்தியா ஆதரவாக நிற்கும் என்ற...








