இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரிகா கிராமி விருதை வென்றார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரிகா டாண்டன் ரிக்கி கேஜை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். சந்திரிகா தனது ஒத்துழைப்பாளர்களான தென்னாப்பிரிக்க புல்லாங்குழல் கலைஞர் வௌட்டர் கெல்லர்மேன் மற்றும் ஜப்பானிய செல்லிஸ்ட் எரு மாட்சுமோட்டோ ஆகியோருடன் இந்த விருதைப் பகிர்ந்து கொண்டார்.
சந்திரிகா டாண்டன், அவருடைய "திரிவேணி" என்ற ஆல்பம் New Age, Ambient or Chant Album பிரிவில் கிராமி விருதை பெற்றுள்ளது. இது அவரது இரண்டாவது கிராமி விருதாகும். இதற்கு முன்பு, 2009ஆம் ஆண்டு, "SOUL CALL" என்ற ஆல்பத்திற்காக அவர் முதல் கிராமி விருதை வென்றிருந்தார்.
நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், தங்கள் அதிகாரப்பூர்வ X (முன்னர் ட்விட்டர்) கணக்கின் மூலம் சந்திரிகாவை வாழ்த்தி, "சிறந்த புதிய யுகம், சுற்றுப்புறம் அல்லது சாண்ட் ஆல்பம் பிரிவில் கிராமி விருதை @RecordingAcad வென்றதற்காக திருமதி சந்திரிகா டாண்டன் ...









