அமெரிக்க கட்டுப்பாட்டில் “டிக்டாக்” செயலி: சீனாவை சமாதானப்படுத்திய டிரம்ப்.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் டிக்டாக் நிறுவனம் செயல்படும் வகையில் சீன அதிபர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனத்தின் சொந்தமான டிக்டாக், குறும்பட வீடியோ, இசை, நடனம் போன்ற படைப்பாற்றல் உள்ளடக்கங்களை பகிரும் தளமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில், கோடிக்கணக்கான மக்கள் தினசரி பயன்படுத்தும் இத்தளத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களுடன், பயனர்களின் தனிப்பட்ட தரவுகளும் சேகரிக்கப்படுகின்றன. இந்த தகவல்கள் சீன அரசின் கையில் செல்லும் அபாயம் இருப்பதாக அமெரிக்க அரசு தொடர்ந்து எச்சரித்தது.
இந்த சூழ்நிலையில், டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகத்தை விற்பனை செய்யாவிட்டால், டிசம்பருக்குள் டிக்டாக் செயலியை தடை செய்யும் என அதிபர் டிரம்ப் முன்கூட்டியே...









