இந்தியாவில் இருந்து 5 மாதங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மொபைல் போன் ஏற்றுமதி!
புதிய நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டுமே இந்தியா, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
மத்திய வர்த்தகத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, மொத்தம் 11.7 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான மொபைல் போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தை விட 55 சதவீதம் அதிகம் ஆகும்.
மொபைல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா வேகமாக முன்னேறுவதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் பங்களிப்பு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தொடங்கியதிலிருந்து மொபைல் போன் ஏற்றுமதி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது நாட்டின் மொத்த மொபைல் போன் ஏற்றுமதியில் 72 சதவீதம் அமெரிக்காவுக்கு சென்றுள்ளது.
...









